அபுல் கலாம் ஆசாத்

திரைச்சீலை

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

Read more