நளினி சுந்தரராஜன், Nalini Sundararajan

கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். “Face in Face” இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். “திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்” ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

நன்றி நவிலும் நவம்பர்

உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு உளமார நன்றி! பாதம் தாங்கும் பூமிக்குநிலம்…

Read more

இயற்கைப் பாடம்

கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென…

Read more

என் பேனா மையின் நிறம்

நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம்…

Read more