Ra.Suganya

இன்னுமொரு இரவு

நட்சத்திரப் பூத்தையல்

காலத்தறி நெய்த

இன்னுமொரு இரவு.

கண் திறவா 

பிள்ளையின் 

இதழ் சிரிப்பாய்

வெள்ளி குழைத்த

நிலாத்துண்டு.

Read more

மழை கவிதைகள்

எத்தனை யுகங்கள் 

கடந்திருக்கும்

இந்த பிரியத்தின் 

மழைத்துளி!

அதன் கண்ணாடி 

மோன உடல்

மிதந்தலைந்தது 

எங்கெங்கே!

Read more