இதழ்கள்

மருத்துவர் பக்கம் -22: மாமிசம் உண்பது தீய பழக்கமன்று.

மனிதன் இயற்கையாகவே ஓர் அனைத்துண்ணி (OMNIVORE). மாமிசம் மட்டும் உண்ணலாம்; தானியங்கள் மட்டும் உண்ணலாம்; காய்கறிகள் மட்டும் உண்ணலாம்; கனிகள் மட்டும் உண்ணலாம். ஹார்லிக்ஸ் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த பாட்டி பற்றியும் படிக்கிறோம்; முட்டை மட்டுமே சாப்பிட்டு நூறு வருடங்கள் வாழ்ந்த…

Read more

வலைப்பூ – 2

This entry is part 2 of 2 in the series வலைப்பூ

தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது.…

Read more

இனியவன் – 4

This entry is part 4 of 4 in the series இனியவன்

“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை. “என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?”…

Read more

சின்ராசு

மால் எனத் தமிழில் அழைக்கப்படும் பல்வணிக அங்காடிக்கும், மால் என அழைக்கப்படும் மாலவன் திருமாலுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என யோசித்தான் நாகராஜ். மால் – பல்வேறு நகரங்களில் பரவி இருந்தாலும் எல்லாம் விதவித டைமென்ஷன்கள், விஸ்தீரணம் என்றாலும் அடிப்படை ஒன்றே. பல…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 17 – மொழியாக்கம்

This entry is part 16 of 16 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை…

Read more

தென்றலோடு கண்ணாமூச்சி.. – பூனையின் பொழுதுகள் 

1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால்  வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. *…

Read more

நல்லாச்சி – 27

This entry is part 27 of 27 in the series நல்லாச்சி

இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 24

நாமார்க்கும் குடியல்லோம்நமனை அஞ்சோம்நரகத்தில் இடர்ப்படோம்நடலை இல்லோம்ஏமாப்போம் பிணி அறியோம்பணிவோம் அல்லோம் என்கிற பாடலைத் திருநாவுக்கரசர் பாடிய பொழுது, இக்காலத்தில் அது பக்தி இலக்கியமாகப் பார்க்கப்பட்டாலும், பாடப்பட்ட அந்த நாளில் எழுச்சி மிகுந்த புரட்சிகரமான பாடலாகத்தான் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு எதிரான பாடல்.…

Read more

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் – 11

This entry is part 11 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பாருக்குள்ளே நல்ல நாடு புடாபெஸ்ட் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது; குறிப்பாக மனிதர்களிடம் பழகும் முறைகள், பொது இடங்களில் பேச வேண்டிய நேரம், மௌனமாக இருக்க வேண்டிய நேரம் எல்லாமே. தவறு என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு அல்ல —…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்

This entry is part 31 of 31 in the series அசுரவதம்

பம்பா நதிக்கரையின் அந்தச் செந்நிறப் பாறை இடுக்குகளில் அந்திப் பொழுது ஒரு மர்மமான நிழலைப் படரவிட்டிருந்தது. நதி நீரின் சலசலப்பு ஏதோ ஒரு எச்சரிக்கையைச் சொல்வது போலத் துரிதப்பட்டது. தூரத்தில் இருந்து அந்த வேடுவ இளைஞனை உற்று நோக்கிய இலக்குவனின் கண்களில்…

Read more