இதழ்கள்

தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..

தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில்…

Read more

ஜிங்கா ருசித்த தேன் 

“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில ரொம்பப் பெரிய பூந்தோட்டமும் இருந்தது. உலகத்தில…

Read more

கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்

மகனே! மகளே!: பாடல்!!(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு) மகனே! மகளே! இளங்குருத்தே!சாப்பிடச் சொன்னால் அழலாமா?மரமும் செடியும் கொடிவகையும்சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?(மகனே! மகளே! இரவும் பகலும் வேர்க்கூட்டம்நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?நீரை உறிஞ்சித் துளிரனைத்தும்இலையாய்க் காயாய்க் கனிகிறதே! கனியும்…

Read more

இயற்கைப் பாடம்

கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென…

Read more

மஞ்சள் முட்டை

ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே…

Read more

அதிசயப்புல்லாங்குழல்

மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் யானைகளும் புலிகளும் பாம்புகளும் நரிகளும் அதிகம்…

Read more

காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!

அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 1 – (மொழியாக்கம்)

உராஷிமா தாரோ முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானியக் கடலோரக் கிராமத்தில், உராஷிமா தாரோ என்னும் பையன் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வந்தான். எப்போதும் போல ஒரு நாள் அவன் மீன் பிடிப்பதற்காகக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே சிறுவர்கள் ஓர் ஆமையைப் பிடித்து…

Read more

நேர் காணல் – விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)

ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, பண்புடன் சிறார் இலக்கிய இதழுக்காக நேர்காணல்…

Read more

விடுமுறைக் கொண்டாட்டம்

“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு…

Read more