நல்லாச்சி – 19
விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள்…