இதழ்கள்

உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 11 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி

This entry is part 36 of 45 in the series அசுரவதம்

இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள். சூர்ப்பனகையின்…

Read more

வெயில் ஆடும் சுவர்

பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்

This entry is part 35 of 45 in the series அசுரவதம்

தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 27

போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த…

Read more

இன்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்

ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச்…

Read more

பேட்ரியாட் – திரை விமர்சனம்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மலையாளத் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன் லாலும் இணைந்து நடிக்கின்ற படம் என்கின்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் இந்திய அளவிலுமே கூட ஓரளவிற்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்தப்…

Read more

மருத்துவர் பக்கம் – 26: புற்றுநோய்-அறிகுறிகள்

புற்றுநோயைப் பொறுத்தவரை அதன் சிகிச்சையில் மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கை யாதெனில், இன்னும் புற்றுநோயைச் சரிசெய்யும் சிகிச்சை வரவில்லை என்பதாக இருக்கிறது. ஆனால், புற்றுநோய் சிகிச்சை மற்றும் மருத்துவம் நவீன அறிவியலின் துணைகொண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. புற்றுநோய்க்கு உள்ளாகும் பெரும்பான்மை…

Read more

நல்லாச்சி – 31

This entry is part 31 of 39 in the series நல்லாச்சி

செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர்…

Read more

ஹனாசகா ஜிஜி – மொழியாக்கம்

இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும்…

Read more