இதழ்கள்

கரும்பைக் கண்ட களிறன்

களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா  தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் இருக்கு, அதனால மண்ணுக்குள்ள இருக்கற கிழங்குகளைத்…

Read more

ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது…

Read more

வானவில் பூ

அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு நாள் மாலை வீட்டின் பின்புறம் இருந்த…

Read more

கள் தந்த போதை! 

இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது.  “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச்…

Read more

சோனாவின் பயணம்

மூலக்கதை: தாரா திவாரி தமிழில்: அழ. வள்ளியப்பா ஓர் அம்மா ஒட்டகமும், சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல்…

Read more

சிறகை விரி

அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில்…

Read more

மான்குட்டி

ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது? எங்கே, எப்படித் தண்ணீர்  குடிப்பது?…

Read more

நண்பேன்டா

மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று…

Read more

நல்லாச்சி – 14

This entry is part 14 of 22 in the series நல்லாச்சி

கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 9

போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக…

Read more