வரலாற்றில் பொருளாதாரம் -3
பூமியில் முதன் முதல் குரங்கில் இருந்து மனிதனாக மாறின பின்னர் பசி எடுக்கும் பொழுது பழங்களை தேடி சாப்பிடுவதற்கும் சிறு மிருகங்களை வேட்டையாடி சாப்பிடுவதற்கும் பழகி இருந்தான். யாரும் அதை புதிதாக சொல்லி தர தேவை இருந்தது இல்லை. அதே போல் கூட்டமாக வாழ்வதற்கும் தலைவன் சொல் கேட்டு நடக்கவும் குரங்குகளாக இருந்த நாட்களிலிருந்தே பழகி இருந்தான்.