நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b)
மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது?
பெண்!
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
– கொத்தமங்கலம் சுப்பு
மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது?
பெண்!
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
– கொத்தமங்கலம் சுப்பு
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
– கண்ணதாசன்
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
– கண்ணதாசன்
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்
– கண்ணதாசன்
இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
– கொத்தமங்கலம் சுப்பு
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி.
கண்களில் கவலை.
“என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”