ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே
ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே
எனக்கும் உற்சாகமாய் இருந்தது மாமா வீட்டுக் கல்யாணம்.. நிறையப் பேர் வருவார்கள் என் வில்லிமங்கலச் சினேகிதி அனகாவைப் பார்க்கலாம்., அங்கே வில்லியாற்றில் நீந்தலாம், விளையாடலாம், அதுவும் மலர்ந்த பின்னர் அவளைப்பார்க்கப் போகிறேன். நிறையப் பேசலாம் சந்தேகங்கள் கேட்கலாம்.