நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 2
இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
– கொத்தமங்கலம் சுப்பு
இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
– கொத்தமங்கலம் சுப்பு
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி.
கண்களில் கவலை.
“என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”