Ramalaksmi

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)

1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு…

Read more

சாக்பீஸ் சூரியன் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கிறது மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும்.…

Read more

மழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல்…

Read more

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more

வழி நடத்தும் நிழல்கள்

மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி…

Read more

கிளி ஜோசியம்

ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது…

Read more