ஜெயந்தி நாராயணன், Jayanthi Narayanan

ஜெயந்தி நாராயணன் மதுரையில் பிறந்தவர். மதுரையிலும் திருச்சியிலும் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில வருடங்கள் பணியாற்றிய பின், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் நிதி மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைகள் பல்வேறு மின்னிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதை மற்றும் வெண்பா எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைத் தொகுப்பான சுகிரா 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்

அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக்…

Read more

மழைப்பாட்டு

மழை வேண்டும்மழை வேண்டும் பருவம் தவறாமழை வேண்டும்பயிர்கள் தழைக்கமழை வேண்டும் நிறைவாய்ப் பெய்யும்மழை வேண்டும்நீர் நிலை பெருகமழை வேண்டும் வயல்வெளி செழிக்கமழை வேண்டும்உழவர் வாழமழை வேண்டும் மண் வளம் பெறவேமழை வேண்டும்மரங்கள் வளரமழை வேண்டும் பூக்கள் பூத்துக் குலுங்கிடவேபுயலில்லாதமழை வேண்டும் மண்ணின்…

Read more

இலக்கம் 136

136, என் மனதுக்கு இணக்கமான எண். என் பால்ய, பதின்ம வயது நினைவுகளால் நிரம்பிய வீட்டின் கதவு எண். வாசல் முதல் பின்புறம் வரை சுமார் நூறடிக்கு மேல் நீண்டிருக்கும் பழங்கால வீடு. வாசல் திண்ணையில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமும் தன்னுள்…

Read more