மழைப்பாட்டு

மழை வேண்டும்
மழை வேண்டும்

பருவம் தவறா
மழை வேண்டும்
பயிர்கள் தழைக்க
மழை வேண்டும்

நிறைவாய்ப் பெய்யும்
மழை வேண்டும்
நீர் நிலை பெருக
மழை வேண்டும்

வயல்வெளி செழிக்க
மழை வேண்டும்
உழவர் வாழ
மழை வேண்டும்

மண் வளம் பெறவே
மழை வேண்டும்
மரங்கள் வளர
மழை வேண்டும்

பூக்கள் பூத்துக் குலுங்கிடவே
புயலில்லாத
மழை வேண்டும்

மண்ணின் வாசம்
வர வேண்டும்
மழையின் வரவை
சொல்வதற்கே

மழையின் சாரல்
அடித்திடவே
மனமும் குளிர்ந்து
போயிடுமே

காகிதக் கப்பல் விட வேண்டும்
மழையின் வேகம்
தணிந்த பின்னே

மழையின் ஊடே
வரும் வெயில்
வானவில்லைத்
தந்திடுமே

மழை வந்தால்
மழை வந்தால்

மண்ணில் உள்ளோர்
மகிழ்வோரே
நன்றி சொல்லி
மழையைத்தான்
என்றும் அவர்கள் வணங்குவரே!

Author

  • ஜெயந்தி நாராயணன் மதுரையில் பிறந்தவர். மதுரையிலும் திருச்சியிலும் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில வருடங்கள் பணியாற்றிய பின், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் நிதி மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

    வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைகள் பல்வேறு மின்னிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதை மற்றும் வெண்பா எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைத் தொகுப்பான சுகிரா 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

Related posts

குரலால் உலகை அரவணைத்தவள் – அஞ்சலி

வரலாற்றில் பொருளாதாரம் – 36

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்