இதழ்கள்

திரைச்சீலை

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

Read more

வாசிப்பு சவால்கள்

ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார்.

Read more

அநாமதேயர்களும் ஆபாசங்களும்.

ஒருவரை ஆபாசமாகத் திட்டுவது கோழைத்தனத்தைக் காட்டுகிறது. இதுவே வீரம் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தற்போது சைபர் கிரைம் பிரிவு வலுப்பெற்றுள்ளது. நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் எளிதாகக் கண்டறிய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதே நம் கடமை. அதுவே அறம்.

Read more

திருவோணத் திருநாளும் வந்நல்லோ..

மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் பூமியும் விண்ணும் அளந்ததும், மூன்றாவது அடியை வைக்க மகாபலி தன் தலையைத் தாழ்த்தினான்.
இறைவன் காலடியில் பணிந்த மகாபலி – “தியாகம்” என்ற சொல்லின் சிலையாக என்றும் நிலைத்தான். அவனது தாராள உள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் திருவோண நாளில் மக்களைக் காண வருகிறான் எனும் நம்பிக்கை இன்றளவும் வாழ்கின்றது.

Read more

வரலாற்றில் பொருளாதாரம்:- 5

இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன். அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக…

Read more

சஞ்சாரம் – யாழினி சென்ஷி

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Read more

ஆவன்னா -ருனா -நிர்மல வதனா -2

ஆல விழுதாக அஞ்சுபத்து பெத்துபுட்டு
..அழகா வாழ்வேன்னு நினச்சேனே எங்கண்ணே
காலம் ஏன்வந்து சுழன்றடிச்சுக் கன்னியுனை
…காத்தில் ஒளிச்சுடுச்சே தெரியலையே என்கண்ணே

Read more

நல்லாச்சி -8

This entry is part 7 of 22 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…

Read more

உமா ஷக்தி கவிதைகள்

உள்ளுக்குள் ஓர் வலி

நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க

வெகு அருகாமையில் சந்தித்த விழிகள்

கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது

Read more