இலக்கியம்

திருவை கவிதைகள்

1. ‎சும்மா கிறுக்குகிறேன் என்பாள்‎கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்‎அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்‎படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்‎எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்‎யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்‎தனக்கே அது உரித்தான பக்கங்களாய்‎ஒவ்வொரு நோட்டுகளும்‎தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்‎அவை தனித்தே இருப்பவை‎அடையாளங்களோடு… ‎*********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம்…

Read more

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது.  அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான்…

Read more

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்

(பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷம்பாக் அவர்கள், எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனின் வேண்டுகோளிற்கிணங்கி நம் சிறப்பிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி) கேள்வி: பெரும் இதிகாசங்களைக் கொண்ட இந்தியப் பெருநிலத்தின் சமகால இலக்கிய ஆக்கங்கள் அந்தத் தொடர்ச்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உருவாகின்றனவா? …

Read more

மிட்டாய்க்காரன்|கணேஷ் வெங்கட்ராமன்

ராகவனை முதன்முதலாகத் துபாயில் சந்தித்தேன். அவனைச் சந்திக்குமுன்னரே அவனைப் பற்றிய சிறப்பம்சங்கள் – வியப்பின், ஆர்வத்தின் ஒன்று சேர்ந்த கலவையாக – என் காதுக்கு எட்டியிருந்தன. அனைவரும் அவனின் எதிர்காலம் கணிக்கும் திறனைச் சிலாகித்தனர். ஒரு வரைபடம் போல கைரேகையை வாசிப்பான்…

Read more

சிதம்பர ரகசியம் | ஸ்ரீதர் நாராயணன்

“பொருள் உணர்ந்தார்க்கு இதொரு பொக்கிஷம்” என்றார் சிதம்பரம். ஏதோ ரகசியத்தை வெளியிடுவது போல மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தார்.  வெள்ளை அரைக்கைச் சட்டையும், கருநீல கால்சராயும், அழுந்த வாரிய தலையும், பட்டை சட்டமிட்ட கண்ணாடியும், கோடு போன்ற மீசையுமாக இருந்த அவருடைய தோற்றம்,…

Read more

கொண்டங்கு சேர்ப்போம் | நகுல்வசன்

நகுல்வசன்: வெளிப்படை என்றாலும் இதை முதலில் பேச வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது என்று தோன்றியதால் இந்தக் கேள்வியுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, அவ்வுலகத்துக்குக் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய கணிசமான நவீனத் தமிழ்ப் படைப்புகள் இருக்கின்றனவா? நட்பாஸ்: மேற்கில்,…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம்

அத்தை – மருமகள் கதை தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அத்தைக்காரி இருந்தாள். அவளுக்கு மருமகள் என்றால் சுத்தமாக ஆகாது. வார்த்தைக்கு வார்த்தை திட்டியும், அடித்தும் அவளை அழ வைத்துக்கொண்டு இருப்பாள். ஒருநாள் அத்தைக்காரி வீட்டுத்…

Read more

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

​1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும்…

Read more

நல்லாச்சி – 20

This entry is part 20 of 22 in the series நல்லாச்சி

தொலைத்த இடத்தில்தான் தேடணும்என்கிறாள் நல்லாச்சிதினமும் ஏதேனுமொன்றைத்தொலைக்கும் பேத்தியிடம்அவள்எங்கோ தொலைத்ததையெல்லாம் கண்டுபிடிக்கும்மந்திரக்கோலன்றோ நல்லாச்சிஎனினும்அல்லல் அதிகமானால் அலுத்தும்கொள்வாள் பொருட்களைத்தொலைத்தே பழக்கப்பட்ட பேத்திஒருநாளில்நல்லதோர் நட்பையும் தொலைக்கிறாள்பிரிவென்ற பெயரில்;அவ்வன்பை எங்கே தேடுவதெனக் குழம்புகிறாள்பெற்றோரின் அன்போஉற்றாரின் அன்போஇன்னபிற களித்தோழரின் அன்போஇணைவைக்க இயலாமல் தத்தளிக்கின்றனதூக்கமின்றி ஏக்கத்தில் மெலிகிறாள் பேத்திமாற்றமொன்றே மருந்தாகும்…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 9 – மொழியாக்கம்

சித்திரக்குள்ளன் மாயாவி (一寸法師) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்துவந்தனர். நீண்ட நாள்களாக அவர்களுக்குக் குழந்தை இல்லை. அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்னும் ஏக்கத்தில் இருந்தனர். ஆலயத்துக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வேண்டுமென வேண்டினர். “கடவுளே!…

Read more