இலக்கியம்

அனைவரும் போற்றும் அன்னை!

நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின்…

Read more

கி. சரஸ்வதி கவிதைகள்

காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில்…

Read more

அறிவென்பது யாதெனில்..

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்…

Read more

ஆன்மாவின் கண்ணீர்..

எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.

Read more

மோடி செய்த மோதி

முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை! எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு…

Read more

அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி

This entry is part 6 of 47 in the series அசுரவதம்

இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று அமைதியை இழந்திருந்தது. மிதிலையின் அரசன் ஜனகன், சானகியின் சுயம்வரத்துக்கு உலகின் எல்லா மன்னர்களையும்…

Read more

இன்னா நாற்பது – பாடல் இரண்டு

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 

Read more

படத்துக்கான பா – 5

நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன்…

Read more

பாட்டுக்கு பா! -3

திண்ணையில் பேச்சென்றுத் தேர்போல் அசைந்தாடிவண்ணமாய் வந்தமர நேரமில்லை – கண்பார்த்துவாதி பிரதிவாதி வம்பு வழக்கெல்லாம்காதிலவன் சொன்ன கதை பதில் சொல்லத் தெரியாது விழித்திட்டவேதியனைச் சிறையிட்டத் தன்மகனை வேண்டிட்டஆதிசிவன் மண்டியிட பிரணவத்தின் விரிவுரையேகாதிலவன் சொன்ன கதை! ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காணாதுவீதியிலே சென்றவனை…

Read more

படத்துக்கான பா – 1

1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ தொக்கிநிற்கப் பொற்கரத்தால் மெல்லிழுத்துஅன்பை அளிப்பாள் அணைத்து–கண்ணன் ராஜகோபாலன்…

Read more