கவிதை

சஞ்சாரம் – யாழினி சென்ஷி

பள்ளத்தில் மீந்திருந்த
மழை நீரில்
மரணத்தைத் துழாவிக்கொண்டிருக்கின்றது
இரு மீன்கள்.
இலையோடு
உதிர்ந்த நிழலையும்
உள்வாங்கிய நீர்
மெல்ல வற்றியதும்
இலைகள் சிறகாகி
பறக்கத்தொடங்கியது
மீன்கள்

Read more

நல்லாச்சி -8

This entry is part 7 of 26 in the series நல்லாச்சி

கைபேசியில் தற்படமெடுக்ககற்றுக்கொண்டுவிட்டாளாம் பேத்திகால் பாவாமல் தாவிக்கொண்டேயிருக்கிறாள் பூக்களின் பின்னணியில் ஒன்றுபூவுடன் முகம் பொருத்தி ஒன்றுகன்றுக்குட்டியுடன் கன்னமிழைத்து இன்னொன்றுகலர் கோழிக்குஞ்சைதலையிலமர்த்தி மற்றொன்றெனகைபேசியின் மூளையைபடங்களால் நிரப்பிக்கொண்டேயிருக்கிறாள். சாக்கு சொல்லி தப்பித்துக்கொண்டிருந்ததாத்தாவைக்கூடசெய்தித்தாள் வாசிக்கும்அசந்த நேரத்தில்காலையொளியின் பின்னணியில் படமெடுத்தாயிற்று ‘எல.. போட்டோ புடிச்சா ஆயுசு கொறையும்’என நழுவிக்கொண்டிருக்கும்நல்லாச்சிக்கும்ஆசை…

Read more

உமா ஷக்தி கவிதைகள்

உள்ளுக்குள் ஓர் வலி

நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க

வெகு அருகாமையில் சந்தித்த விழிகள்

கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது

Read more

நல்லாச்சி -7

This entry is part 8 of 26 in the series நல்லாச்சி

தங்கம் ரப்பர் சங்கு எனவிதவிதமாய் அணிந்த வளையல்கள்அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்குபுதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறதுகண்ணாடி வளையல்கள் மீது கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சிஅணிந்தோரையும் அடுத்தோரையும்தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்பேத்தியின் குதூகலம்நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறதுஆடைக்கேற்ற வண்ணங்களில்பேத்தியின் பூங்கரங்களில்அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசைமூடுபனியென கள்ளன்…

Read more

நல்லாச்சி – 6

This entry is part 6 of 26 in the series நல்லாச்சி

தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே நேரத்தில் சொன்னபடிமெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியைதாக்குகிறது…

Read more

பாலைவன லாந்தர் கவிதைகள்

கண்கள் மற்றவர்கள் போலில்லைகள் வடிக்கும் கண்களைபெற்றிருக்கிறாள்கடந்து போவதற்கும்கரைந்து போவதற்கும்அவை வழிகாட்டிகள்** அவரின்கண்களைக் கசக்கி மூடிவிட சொன்னார்கள்என் விரல்களுக்கும் உள்ளங்கைக்கும் கசக்கும் வித்தை தெரியவில்லைவெறித்த விழிகளில்கடைசியாக எதைப் பார்த்திருப்பார் என எதிர் திசையைப் பார்த்தேன்அவரே நின்றுக் கொண்டிருந்தார்** எந்தக் கண்களை தானம் செய்வதுஏற்கனவே…

Read more

படத்துக்கான பா – 5

நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – சோலைதனில்செம்பந் திறங்கிடச் சேர்ந்தது வேலிமுகம்கம்பிகளின் காட்டில் கதிர் மாலா மாதவன் காலையிலே எழுந்தவுடன்…

Read more

நல்லாச்சி -5

This entry is part 5 of 26 in the series நல்லாச்சி

நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும்
வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு
விண்வெளிக்கும் செல்ல வேண்டும்

Read more