சிறுகதை

மாடுலர் கிஷ்டன்

சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது…

Read more

பிள்ளை மனசு

விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள். “பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..” சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன். “வா.. போயிட்டு வந்தரலாம்…” “டிபன்?” “அதெல்லாம் அப்புறம்..” நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ என்பது நாங்கள் வைத்த பெயர். சொந்தப்…

Read more

பார்க்காமலே..

நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான கார். அதே சமயத்தில் ரொமாண்டிக்காகவும் இருந்தது.…

Read more

முதலாளி

“அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க” ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் பிளாட்பாரத்தில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து…

Read more

புனரபி மரணம்

பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால்,…

Read more

வாழ்தல் இனிது

“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண…

Read more

அறிவென்பது யாதெனில்..

“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும்…

Read more

‘ஓண ஸத்ய’

‘திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!’ என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.

Read more

திரைச்சீலை

நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் சுற்றில் நான் நிற்கும்போது சுட்டுவிரலின் நுனியைப் பார்ப்பேன், சிவந்து போயிருக்கும், அவளுக்குத் தெரியாமல் லேசாக வருடிக்கொடுத்துவிடுவேன். மருதாணிச் சிவப்பும் இரத்தம் கன்றிய சிவப்புமாக ரோஜாவையே தோற்கடிக்கும் நிறத்தில் அப்பப்பா விரல்களா அவை.

Read more

உலகின் சின்னஞ்சிறு காதல் கதை

பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – அவன் ஒளியிலும் அவள் இருளிலும்.

Read more