சிறுகதை

அதிர்ஷ்டம்

சாரதா டீச்சர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரின் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொண்டான் ப்ரகாஷ். பணிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் இப்படியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். யாரும் நம்புவதற்கே சிரமம்தான். “குனிஞ்ச தலை நிமிராம எவ்வளவு நேரம்ப்பா நடப்பாரு?” என்ற வார்த்தைகளில் எவ்வளவு…

Read more

மீட்சி

கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி…

Read more

காலவெளி மருத்துவன்

காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை…

Read more

கொரோனா

நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால்…

Read more

சாம்பன் 

ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள…

Read more

தேயும் நிலா

“நிலா காய்கிறது மேலும் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே”.. எங்கிருந்தோ தூரத்திலிருந்து மிதந்து வந்த அந்தப் பாடல் வரிகள் அவர் காதில் விழுந்தன. சாளரத்தின் ஓரம் அமர்ந்திருந்த அவர் எழுபதுகளைத் தாண்டியவர். முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். சரிந்து விழும் மாலையின் வெயில் அந்த…

Read more

ஒரு (தற்)கொலை நடக்கப்போகிறது

இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு…

Read more

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!

என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி…

Read more

மௌனத்தின் நறுமணம்

சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

This entry is part 17 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

மட்சுயமா கண்ணாடி (松山鏡) ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது.…

Read more