கலைவாணி கவிதைகள்

கொழுந்து வெயிலின்

நிழலினை

முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன்.

அச்சிலிர்ப்பில் பிறக்கும் வலிமையினை

ஓர் நெடிய வரலாற்றின் மீதமர்ந்து

தூதெழுதுகிறேன்

இப்படியாக!

எனக்கு பாத்தியப்பட்ட

கடலின் பவளக் காடுகளை

துண்டாட நீளாத

நின் கரங்களுக்கு

எனது ரேகையில் கோர்த்தெடுத்த

நீர்துளியினை

அணிவிக்க காத்திருக்கிறேனெ!!

Author

Related posts

அழகின் வெளிச்சம்.

காலத்தின் ஆன்மா.

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)