கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு

This entry is part 6 of 11 in the series கொங்கு வட்டார வழக்கு

கட்டாப்பு

போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு..

நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு அல்லாத்தயும் எடுத்துகிட்டாங்கங் .

எடுத்த பொறவு வேணாம்னு
எப்படிச்சொல்றதுங்.

அடுத்த கட்டாப்பு கண்டிசனா கொண்டுவரனுங்கோ.

கட்டாப்பு : பொதுவாக அகராதியில் கட்டாப்பு” (Kattaappu) என்ற சொல்லுக்கு வேலியடைத்த நிலம் அல்லது காவல் நிலம் என்று பொருளும். இது வேலியால் சுழப்பட்ட அல்லது அடைக்கப்பட்ட ஒரு பகுதியைக் குறிக்கிறது.

Series Navigation<< கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19