மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் – 2026

5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று

This entry is part 1 of 5 in the series 5 நான்கள்

“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை.…

Read more

குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Read more

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

This entry is part 12 of 12 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பனிவிழும் மலர்வனம் புடாபெஸ்டிலிருந்து திரும்பியது ஒரு முடிவல்ல; ஒரு தொடக்கம். என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்தது. நல்ல முடிவுகள் வரத் தொடங்கியிருந்தன. UCLA நடத்தும் குளிர்கால மாநாட்டுக்கு அனுப்பிய கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தைப் படித்தபோது, அது ஒரு சாதாரணக் கடிதமல்ல…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

This entry is part 33 of 37 in the series அசுரவதம்

கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது. அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும்…

Read more

குறுங்கவிதை – மர்வான் மஃகூல்

தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.

Read more

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்

தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும்…

Read more

வலைப்பூ – 4

This entry is part 4 of 7 in the series வலைப்பூ

“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.” சுசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நாடித் துடிப்பு எகிறியது. முகம் தெரியாத ஒரு குரல், தன் வீட்டின் தனிமைக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற உணர்வு. உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். “சொல்லுங்க மீனா. யார்…

Read more

நீருக்குள் மீன் – கோபால் ஹொன்னால்கெரே

தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 25

சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில்…

Read more

அனு பாப்பச்சன் கவிதைகள்

தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து…

Read more