காந்தி கௌசல்யா கவிதைகள்

கையிருப்புக்கென எடுத்துவைக்கப்படும்

அன்பு

காலத்தை

உண்டு

கொழுத்து நிற்கிறது…

என்மீது நரையும்

சுருக்கமுமாய்

அப்பிக்கிடப்பதெல்லாம்

அன்புதான்

கொஞ்சம் கொஞ்சமாய்த்

தின்று தீர்த்துவிட்டு

கைகால் நீட்டி சாவகாசமாய்

ஓய்வெடுக்கிறது…

அதை…

இறக்கிவைத்துவிட்டுக்

களைப்பாற

இடம் தேடியபடியே அலைகிறது வாழ்க்கை.

Author

Related posts

அழகின் வெளிச்சம்.

காலத்தின் ஆன்மா.

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)