Home கவிதைகாந்தி கௌசல்யா கவிதைகள்

காந்தி கௌசல்யா கவிதைகள்

by Gandhi Kausalya
0 comments

கையிருப்புக்கென எடுத்துவைக்கப்படும்

அன்பு

காலத்தை

உண்டு

கொழுத்து நிற்கிறது…

என்மீது நரையும்

சுருக்கமுமாய்

அப்பிக்கிடப்பதெல்லாம்

அன்புதான்

கொஞ்சம் கொஞ்சமாய்த்

தின்று தீர்த்துவிட்டு

கைகால் நீட்டி சாவகாசமாய்

ஓய்வெடுக்கிறது…

அதை…

இறக்கிவைத்துவிட்டுக்

களைப்பாற

இடம் தேடியபடியே அலைகிறது வாழ்க்கை.

Author

You may also like

Leave a Comment