கவிதை

அழகின் வெளிச்சம்.

வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம்.…

Read more

காலத்தின் ஆன்மா.

பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல்…

Read more

பால் வாசம் – (பத்து குறுங்கவிதைகள்)

1. சரசரக்கும் சருகுகள்கிளை தாவும் அணில்காற்றின் வேகத்தில். 2. அமைதியான பின்வாசல்அணிலின் வாலசைவு விளையாட்டுநடனமாடும் அசைவின்மை. 3. மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்கொட்டையைக் கொறிக்கும் அணில்திட்டமிடும் குளிர்காலம். 4. புற்களில் காலைப் பனித்துளிநொடியில் மறையும் கால்தடங்கள்நிசப்தத்தைக் கைப்பற்றும் அணில்கள். 5. மிதக்கும் மேகங்கள்மரத்துக்கு…

Read more

நல்லாச்சி – 17

This entry is part 17 of 17 in the series நல்லாச்சி

வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை…

Read more

மழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல்…

Read more

நல்லாச்சி – 16

This entry is part 16 of 17 in the series நல்லாச்சி

ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய்…

Read more

நல்லாச்சி – 15

This entry is part 15 of 17 in the series நல்லாச்சி

சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது…

Read more

நல்லாச்சி – 14

This entry is part 14 of 17 in the series நல்லாச்சி

கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு வயல் வீரர்களை நோக்கிகுழம்பும் கறியுமாய் ஆயுதமேந்தி…

Read more

மன்னிப்புக் கோர மறுப்பவள்

அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள். அவர்கள் ஒருபோதும்…

Read more

நல்லாச்சி – 13

This entry is part 13 of 17 in the series நல்லாச்சி

திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப்…

Read more