கவிதை

சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால்…

Read more

நல்லாச்சி – 34

This entry is part 34 of 40 in the series நல்லாச்சி

பெரியதாத்தா வரும் தினங்களில்இறக்கை கட்டிக் குதூகலிப்பாள் பேத்திவயலில் விளைந்தவையென கொண்டுவரும் மூட்டைக்குள்தோட்டத்தில் உதிர்ந்தவையெனஒன்றிரண்டு மயிற்பீலிகளும் இருப்பதுவும்ஒரு காரணம் ஆடலும்பாடலும் கதைசொல்லலுமாய்தாத்தாவின் தோளில் நிழலாய்த்தொற்றிநல்லாச்சியை மறந்து திரியும் பேத்திக்குஒரேயொரு குறைதான்தன் களித்தோழனிடம்கைவிரலிடுக்கில் புகையும் கடைசி விரல்தான் அதுஆருரைத்தும் கேட்காத அகந்தையைஅறிவுறுத்தி உடைக்க எண்ணுகிறாள்…

Read more

அக்னி நட்சத்திரம்

1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும்…

Read more

ர.பா.இந்துமதி கவிதைகள்

1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு…

Read more

நல்லாச்சி – 33

This entry is part 33 of 40 in the series நல்லாச்சி

சிக்கனமென்பது கிஞ்சித்துமில்லாமூத்தவனால் பெருங்கவலை நல்லாச்சிக்குகாசுபணமெல்லாம் தண்ணீர் பட்டபாடு அவனுக்குதண்ணீரையும் அவ்வாறே வாரியிறைப்பான்பிறரைப்பற்றிக் கவலை கொள்ளா அப்பெருஞ்செலவாளிநாளையைப் பற்றிச் சற்றும் எண்ணாதவனைஎண்ணியெண்ணி நாளும் உருகுகிறாள்‘எங்காலத்துக்குப் பொறவு என்ன கதியோ?!’ என மருகுகிறாள்பிள்ளையின்மேல் படியும் ஏளனப்பார்வைகளைசகியாத நல்லாச்சிபெரியப்பனுக்குப் பரிகிறாள் பேத்தி தாகங்கொண்ட வெய்யோன் அருந்தியதால்கோழிக்காலாய்…

Read more

இறைவனின் இணையில்லாப் படைப்பு

இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -3

This entry is part 3 of 12 in the series திருவை மு.இரா. கவிதைகள்

உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம்…

Read more

என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன்…

Read more

நல்லாச்சி – 32

This entry is part 32 of 40 in the series நல்லாச்சி

செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது…

Read more

உருதுக்கவிதை உலகு – 1

This entry is part 1 of 11 in the series உருதுக்கவிதை உலகு

எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக்…

Read more