இயற்கையின் இறைஞ்சல்
கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது…