கவிதை

இயற்கையின் இறைஞ்சல்

கால் இடறிய நொடியில்குனிந்து பார்த்த அற்புதம்கண்கள் தான் நம்பவில்லை முந்தைய இரவு பெய்தவிண்மீன் மழைச் சாரலில்முளைத்தனவோ தெரியவில்லை இலையில்லா காம்புகளில்வழியெங்கும் நட்சத்திரப் பூக்கள்அழகினை விவரிக்க வார்த்தையில்லை எப்போதும் எதற்கும் நேரமின்றிநமக்காய் அதிசயங்கள் காலடியில்பூத்திருப்பதைக் காணாது கடக்கின்றோம் நின்று இரசித்து மகிழ்ந்திடஇயற்கை இறைஞ்சுகிறது…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் -1

முதலில் கடலின் வழக்கிற்கேற்றாற்போல்மூலங்கள் தோன்றினஅம்மூலங்களுக்குத் தேவையான காரணங்கள்பலவாய்க் கிடைத்தனஅப்போது அது கடலெனக் கொள்ளப்படவில்லைஅந்தக் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனபேதங்கள் அலையடிக்கத் தொடங்கினசில நுரைத்துப் பொங்கினகாரணங்களால் காரணங்கள் நிறையத் தோன்றினஅதோடு மூலங்கள் தோன்றினஅப்போதும் காரணங்கள் பலவாறாய் விளக்கமடைந்தனகாரணங்களுக்கு ஆலோசனை வழங்க முன்வந்தது வழக்குவழக்குகள் அடியாழத்தில்…

Read more

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக்…

Read more

நல்லாச்சி – 30

This entry is part 30 of 32 in the series நல்லாச்சி

நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள்…

Read more

குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Read more

குறுங்கவிதை – மர்வான் மஃகூல்

தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும்.

Read more

நீருக்குள் மீன் – கோபால் ஹொன்னால்கெரே

தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-) தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன் கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில்…

Read more

அனு பாப்பச்சன் கவிதைகள்

தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து…

Read more

மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.

தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள்…

Read more

பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை

தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும்…

Read more