கட்டுரை

தரிசனம்

மலையை ஏறியது கால்கள் அல்ல… குடும்பத்தின் அன்பு! வாழ்க்கை ஒரு நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறது… இல்லை, நாம்தான் அதை நோக்கி வெறித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்! காலையில் விழித்த கணமே வேலை, மெசேஜ்கள், செய்திகள், பொறுப்புகள், கடமைகள் என்று ஆளுக்கொரு திசையில் ஓடித்…

Read more

சலாவுதீன் – ஜெருசலேமை வென்ற மாவீரன்

1. நரகத்தின் நிழலில் ஒரு நகரம் கி.பி. 1187 – அக்டோபர் 2: ஜெருசலேம் அன்று ஜெருசலேம் நகரம் ஒரு அசாதாரணமான அமைதியில் மூழ்கியிருந்தது. கோட்டை மதில்களின் மீது நின்றிருந்த காவலர்கள், தொலைவில் எழும்பிய அடர்ந்த புழுதிப் படலத்தையே இமைக்காமல் கவனித்துக்…

Read more

மர்மமான நூல்

மக்களை நூற்றாண்டுகளாகக் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் மர்மமான பழமையான கையெழுத்து நூல்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது The Voynich Manuscript ஆகும். உலகின் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், குறியீட்டு நிபுணர்கள், கணினி விஞ்ஞானிகள் என எண்ணற்றோர் இந்த…

Read more

மனித மனதின் நிழல்களும் வெளிச்சங்களும் – ராஜேஷ் வைரபாண்டியனின் “அறல்” சிறுகதைத் தொகுப்பு – வாசிப்பனுபவம்

மனித மனதின் நுட்பமான உளவியல் சிக்கல்களைப் பேசும் இக்கதைகள், கிராமத்து வாழ்வின் எளிய மனிதர்களையும் அவர்களின் ஆன்மத் துடிப்பையும் மிக நெருக்கமாகப் பதிவு செய்கின்றன. மற்றொரு புறம், நகரத்து வாழ்வின் கோர முகங்களையும், நிழல் உலகின் மர்மச் சுவடுகளையும் எதார்த்தமான மொழியில் மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. … ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களைக் கொண்டவை.

Read more

என் இனிய தமிழ் மக்களின் வாழ்க்கையில் ‘அவன்’ – அஞ்சலி

திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும்…

Read more

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

108 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பில், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணம் ஆழ்ந்த நெகிழ்வுடனும், உண்மையுடனும் விரிகிறது. சூரிய ஒளியில் நனைந்த குழந்தைப் பருவ நினைவுகள், தாயின் ஆழமான அன்பு, தந்தையின் அமைதியான பிரியம், உறவுகளின் உன்னதம், தன் குழந்தைகளின் மீதான எல்லையற்ற பாசம்.. இவை அனைத்தும் கவிஞரின் உள்ளத்திலிருந்து தீட்டப்பட்ட ஓவியங்களாக உயிர்பெற்றுள்ளன. …

Read more

அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்

பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும்,…

Read more

வழித்தடங்கள்

பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது. புதிதாக வந்த தமிழாசிரியர்…

Read more

தொப்புள் கொடி பந்தம்

“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை…

Read more

“மாமைக் கவினே” – மாநிற/கருமை அழகே!

முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம்…

Read more