காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது. …
Author
அகிலாண்ட பாரதி, Akhilanda Bharathi,
அகிலாண்ட பாரதி, Akhilanda Bharathi,
அகிலாண்ட பாரதி தமிழ் எழுத்தாளர் மற்றும் மருத்துவர் ஆவார், நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தில் பிறந்த இவர், மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவத் துறையில் பணிபுரிகிறார். பத்து நாவல்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி பல பரிசுகளைப்பெற்றுள்ளார். மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்கரன்கோவில், உலககோப்பை, சேக்காளி மற்றும் நினைவின் வழிப்படூஉம்… போன்ற பல நூல்கள் இவர் எழுதியவற்றில் முக்கியமானவை.
உனக்குப் பிடித்த பண்டிகை என்ன? என்று சிறுவயதில் என்னை யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக நவராத்திரி என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் பொம்மைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மருத்துவராகி இருபது வருடங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் கல்லூரி வாசலைத் தொட்டிருக்கிறார்கள். …