“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில் …
நாவல்
இருள் சூழ்ந்த ஒரு குகைக்குள், பழிவாங்கும் தாகத்தோடு காத்திருந்த சூர்ப்பனகையின் காதுகளில் அந்தத் தித்திப்பான செய்தி தேனாகப் பாய்ந்தது. கிஷ்கிந்தையில் இருந்து மூச்சிரைக்க ஓடிவந்த அவளது ஒற்றர்கள், வாலி சாய்ந்ததையும் இராமனின் அம்பு அவனது மார்பைப் பிளந்ததையும் விலாவாரியாகச் சொன்னார்கள். சூர்ப்பனகையின் …
அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
தாரை அந்தப் போர்க்களத்தின் நடுவே நின்றிருந்தாள். கிஷ்கிந்தையின் செம்மண் பூமி அன்று உண்மையாகவே ரத்தச் சிவப்பைக் குடித்து, அந்திச் சூரியனைப் போலச் சிவந்திருந்தது. இடிபாடுகளுக்கிடையே ஆணிவேர் அறுபட்ட மாபெரும் ஆச்சா மரம் போல நிலத்தில் சாய்ந்து கிடந்தான் வாலி. அவனது அகன்ற …
விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. மேசையின் மீதிருந்த அந்தச் சிறிய காகிதத் துண்டை அர்ஜுன் கையில் எடுத்தான். அதில் சில எண்களும் எழுத்துகளும் கலந்த ஒரு புதிய கடவுச்சொல் கிறுக்கப்பட்டிருந்தது. சுசி சமையலறைக் கல்மேடையில் …
“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள் …
சனிக்கிழமை காலை. பத்து முப்பது. பெல்லந்தூர் அடுக்குமாடிக் குடியிருப்பு வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. அர்ஜுன் நேற்றிரவு சுசியிடம் எல்லாமும் ஒப்பித்துவிட்டான். அவளுக்குப் புரிந்தது – மீனா அவனது மாயையைக் கலைத்துவிட்டாள் என்பது. அர்ஜுன் சோபாவில் அமர்ந்திருந்தான். கைகளில் காபி குவளை …
மாலை நான்கு பதினைந்து. பிரிகேட் சாலை. போக்குவரத்துச் சத்தம் காதைப் பிளந்தது. தேநீரகத்தின் ஓரத்து மேஜை. அர்ஜுன் இரண்டாவது காபியைக் குடித்துக் கொண்டிருந்தான். கண்கள் கண்ணாடி கதவையே வெறித்தன. பதினேழு வருடங்களுக்கு முந்தைய மீனாவை அவனது மூளை தேடியது. மெல்லிய சுடிதார். …
முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து …
மலைப்பாறைகளைக் குடைந்து, இரும்பைக் காய்ச்சி ஊற்றி வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான கதவுகளைக் கொண்டது கிஷ்கிந்தையின் கோட்டை. முன்னிரவு விலகி, விடியல் சற்றே மயங்கும் அந்தக் காலை வேளையில், சந்தனமும் அகிலும் மணக்கும் அரண்மனையின் அந்தப்புரத்தில் வாலி சிறு துயில் கொண்டிருந்தான். அவனது மலைச்சிகரம் …