இறைவன்மலரின் நறுமணம் பிரித்து எடுத்தான்மலைநேர் மரத்தின் மாண்பினைச் சேர்த்தான்புலரிப் பனியின் மென்மை குழைத்தான்புணரியினுள்ளிருந்த அமைதியினை அகழ்ந்தான்அந்திப் பொழுதின் அழகை வார்த்தான்ஆயிரம் விண்மீன் ஆன்மாவினை வடித்தான்சிலிர்க்கும் ஓடையின் நகையினை இட்டான்சிறகடிக்கும் புள்ளின் நளினம் கோர்த்தான்இத்தனை எழிலினையும் ஒன்றாய்ப் பிணைத்துஇணையிலாக் கலையினை இறைவன் முடித்தான்;முழுமை …
கவிதை
உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதெனபலமாக அடித்தது காற்றுஉதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்உயிரற்றும் உயிரோடும்பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லைபலத்த மழைக்கும் எதிர்ப்பில்லைகடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லைஎப்படித்தான் வாழ்வாயோ நகர்ந்து செல்ல முடிந்தால்பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்எல்லாரோடும் உரையாட முடிந்தால்வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்உனக்கு நிகர்தான் யாரு. உண்மையென்றால் குழப்பம்தான்இருக்கலாம் …
இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன் …
செல்லப்பிராணி வளர்க்க ஆசை பேத்திக்குவீட்டிலுள்ளோரைப் பிய்த்துப்பிடுங்குகிறாள்சேக்காளிகள் வீடுகளிலெல்லாம் வளர்க்கின்றனராம்கதைகதையாய்ச் சொல்கின்றனராம் அருமைபெருமைகளைசொல்லிச்சொல்லி மாய்கிறாள்தனக்குமொன்று இல்லையெனில் மதிப்பில்லையென்கிறாள் நடைபழக நாயோ பூனையோசேர்ந்து மிழற்ற கிளியோ குருவிக்குஞ்சோசொப்புவாய் குவித்துக்கொஞ்சும் மீன்களோஎனக்கொரு செல்லம் வேண்டுமென்கிறாள்பராமரிப்பை அஞ்சுகின்றனர் வீட்டார்பிள்ளைப்பாசம் நிறைவேற்றச்சொல்கிறதுஇயலாமை பின்னடைய வைக்கிறது அன்றோர்தினம் கீச்வீச்சென விடிகிறது …
எத்தனை ஊழ்வினைஆறடி நிலமும் கிடைக்கவில்லைஎன்னைப் புதைக்கஎன் மண்ணில் – பகதூர் ஷா ஸஃபர் (1775-1862) ஆண்டு 1857, இந்தியாவில் கிளர்ச்சியை உண்டாக்கிய சிப்பாய்க் கலகம் ஆங்கிலேயரின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டது. மொகலாய மன்னர் பகதூர் ஷா கைது செய்யப்படுகிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் …
பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில். …
அனைத்தையும் சுருட்டிவிட்ட பிறகுஎதுவும் இல்லையென்று செல்பவன்தான் அவன்அவன் அப்படிச் சென்றபிறகும்எல்லாமும் இருந்ததுஅவன் பார்வையில் பட்டவை அளவு சுருங்கியிருந்தனஅவன் பார்வையும் சுருங்கி இருந்ததுதன்னில் இல்லைஅவனிடமே என்று மூச்சு விடாதும் ஒப்பிப்பான்அயரவே மாட்டான்விட்ட பிடி கிடைக்காதா என்பதில் விடாப்பிடியாக இருப்பான்புரண்டு விழுந்து எழுந்தாவது எதையும் …
ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
செல்லாச்சி வீட்டில் அமளியாயிருக்கிறதெனஓடுகின்றனர் நல்லாச்சியும் பேத்தியும்பிடிவாதம் கொண்ட பேரப்பிள்ளைகளால்இடிந்து அமர்ந்திருக்கிறது குடும்பம்அவர்கள் உதிர்த்ததகாத வார்த்தைகளும் தற்கொலை அச்சுறுத்தல்களும்இறைந்து கிடக்கின்றன வீடெங்கும்வாசலில் வழியும் ஒன்றிரண்டு வார்த்தைகளால்எட்டிப்பார்க்கும் வம்பர்களும் அன்பர்களும்இன்னும் குறுக வைக்கின்றனர் அக்குடும்பத்தைபெற்றோரும் அவர்களைப் பெற்றோரும்ஒருவர்மேல் ஒருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர்செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாய்இருவர் …
மூலம்: “Poetry Readings” – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழாக்கம்: ராமலக்ஷ்மி கவிதை வாசிப்புகள்எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடானவிஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்ஆண்களும் பெண்களுமாக,வாரம் தோறும், மாதம் தோறும்,வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டுதங்கள் …