அவன் வராமல் போன அன்று..

அந்தக் கடற்கரை
சாலையின் மதிய வெயில்
இதமாய்க் குளிர்ந்தது
அலைபேசி அழைப்புகளை
நிராகரித்த அவனுடைய
அவசர வேலையை சபிக்கிறேன்
ஆயினும்
இத்தனை கருணையாய்
இத்தனைத் தனிமையாய்
ஒரு சுதந்திர தினத்தை
இன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்
ஆனால்
ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்
என்னிடம் இருப்பது என்ன?
இப்படி எல்லாம் எண்ணங்கள்
அலைமோதிக் கொண்டிருக்கையில்
அந்தக் கடல் காகங்கள்
ஒவ்வொரு முறையும்
நீரில் மூழ்கி
மீனைக் கொத்திச் செல்கின்றன.

Author

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்