அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாக
தானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்
உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்
தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்
கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்
அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Author

Related posts

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்

திருவை மு.இரா. கவிதைகள் – 5