நல்லாச்சி – 36
சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்…