இலக்கியம்

அறிவே அனைத்துமாக

விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம்

‎தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி ‎நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 7 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும்…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது,…

Read more

பரிசோதனை

ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு…

Read more

நல்லாச்சி – 18

This entry is part 18 of 26 in the series நல்லாச்சி

கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி…

Read more

அழகின் வெளிச்சம்.

வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம்.…

Read more

அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

This entry is part 18 of 30 in the series அசுரவதம்

தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட ,…

Read more

“ம்..” 5 (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series "ம்.."

சூரியன் உச்சியை அடைந்து விட்டான். இருந்தாலும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மெல்லிய வெயில்தான். சூடொன்றும் ஆகவில்லை. இரவில் மழை வந்தாலும் வரலாம். ஆனால் ச்சில்லென்ற காற்று அடித்து எனக்கே ஒரு மாதிரிக் குளிராய் இருக்கிறது. கூடவே என் கண்ணில் நீர். ஆவி அழலாமா…

Read more

காலத்தின் ஆன்மா.

பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல்…

Read more