முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ்

திருக்குறளில் காணலாகும் அரண் குறித்த செய்திகள்

ஆய்வுச் சுருக்கம்: உலகம் போற்றும் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்களுள் தலையாய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இந்நூல் மொழிவேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுப் போற்றும்படியாகத் திகழ்வதால் தான் பழங்காலம் முதற்கொண்டே பலரும் இதற்கு உரை எழுதிச் சிறப்பு பெற்று வருகின்றனர்.…

Read more

எத்தனால் காவியம்

காலை அஞ்சரை மணி. கனவில் நான் ஒரு அழகான தீவில் ஐஸ்வர்யா ராயுடன் இளநீர் குடித்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு சுனாமி வந்து ஐஸ்வர்யாவை இழுத்துச் சென்றது. கண் விழித்துப் பார்த்தால், சுனாமி இல்லை—என் செல்போன் ‘வைப்ரேஷன்’ மோடையும் தாண்டி அலறிக்கொண்டிருந்தது.…

Read more

இருட்டால் ஒரு வெளிச்சம்

“நாம கெளம்பலாம்… எப்படியோ தங்கிக்க எடம் கெடச்சிருச்சு! அதுவும் நம்ம அபார்ட்மெண்ட்டிலேயே!! ஆனா, அஞ்சாவது மாடில, 512-ம் நம்பர்ல!” என்று, குளத்திலிருந்து கரையேறியவன்போல ஈரஞ் சொட்டச்சொட்ட கதவுக்கு வெளியே நின்று நடுநடுங்கியபடி தன் குடும்பத்தாரிடம் செல்வராஜ் சொன்னபோது நள்ளிரவு போலிருந்தது. ஆனால்…

Read more

வெக்கை

காலையில் கண் விழிக்கும்போதே ‘இன்னக்கிப் போயி பெரிய மகளைப் பாத்துட்டு வரணும்’ என்ற எண்ணம் மாரிச்சாமியின் மனதில் அழுத்தமாய் எழுந்தது. இரண்டு நாட்களாகவே இந்த எண்ணம் மனதில் எழத்தான் செய்கிறது என்றாலும், மே மாத அக்னிவெயில் புலரும்போதே எதையோ எரிக்கும் ஆவலோடு…

Read more

நேர் கொண்ட பார்வை

“எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது ரகுவுக்கு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை. ‘ஒருவேளை திரும்பவும் சென்று நினைவூட்ட…

Read more

அந்நியன்

இந்த நிகழ்வை அவர் எதிர்பார்க்கவில்லை. 40 வருடங்களை நெருங்கும் பணி அனுபவத்தில் சலிப்பூட்டக்கூடிய மற்ற எல்லா நாட்களையும் போலத்தான் இந்த நாளும் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால், இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும்…

Read more