86
- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
#அரக்கியுடறது.
ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது.
எப்டி வண்டி,வாசி போறது.
தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது)
( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை
வாசி – வழி )
இட்டாரில நானொருத்தந்தா பொழங்கறனா மாப்ள, நானேதா எப்பப்பாரு,போனாப்போவுது, நாம்பதான பொழங்கறம்னு நறுவுசு பண்ணி உடறன்.
ஒருத்தனும் அண்ணாந்து பாக்கற சோலி இல்ல. அதா இந்த தடவ நானுங் கண்டுக்குல.
( நறுவிசு – லேசாக / மென்மையாக / பதமாக )
போச்சாதுடுங்க. அறுவாளயும், கவையையும் கொண்டாங்க மாமா. ஆளுக்கு கொஞ்சமா அரக்கீருவோம்.
( நல்லா அரக்கியுடுங்கறது அழுத்தி தேய்ச்சு விடுங்கற அர்த்தத்திலயும் வரும்)