வெயில் ஆடும் சுவர்
பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.…