Home இலக்கியம்மழைப்பாட்டு

மழை வேண்டும்
மழை வேண்டும்

பருவம் தவறா
மழை வேண்டும்
பயிர்கள் தழைக்க
மழை வேண்டும்

நிறைவாய்ப் பெய்யும்
மழை வேண்டும்
நீர் நிலை பெருக
மழை வேண்டும்

வயல்வெளி செழிக்க
மழை வேண்டும்
உழவர் வாழ
மழை வேண்டும்

மண் வளம் பெறவே
மழை வேண்டும்
மரங்கள் வளர
மழை வேண்டும்

பூக்கள் பூத்துக் குலுங்கிடவே
புயலில்லாத
மழை வேண்டும்

மண்ணின் வாசம்
வர வேண்டும்
மழையின் வரவை
சொல்வதற்கே

மழையின் சாரல்
அடித்திடவே
மனமும் குளிர்ந்து
போயிடுமே

காகிதக் கப்பல் விட வேண்டும்
மழையின் வேகம்
தணிந்த பின்னே

மழையின் ஊடே
வரும் வெயில்
வானவில்லைத்
தந்திடுமே

மழை வந்தால்
மழை வந்தால்

மண்ணில் உள்ளோர்
மகிழ்வோரே
நன்றி சொல்லி
மழையைத்தான்
என்றும் அவர்கள் வணங்குவரே!

Author

  • ஜெயந்தி நாராயணன் மதுரையில் பிறந்தவர். மதுரையிலும் திருச்சியிலும் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில வருடங்கள் பணியாற்றிய பின், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் நிதி மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைகள் பல்வேறு மின்னிதழ்களிலும், வார இதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதை மற்றும் வெண்பா எழுதுவதிலும் ஆர்வமுள்ள இவருடைய சிறுகதைத் தொகுப்பான சுகிரா 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது.

You may also like

Leave a Comment