இதழ் 15

ஞான நூல்கள் – 16 & 17

This entry is part 8 of 10 in the series ஞானநூல்கள்

அத்தியாயம் 16: அனலெக்ட்ஸும் திருக்குறளும் – இரு நாகரிகங்கள், ஒரே மனிதநேயம் சீனாவின் அனலெக்ட்ஸையும் தமிழின் திருக்குறளையும் ஒன்றாக வாசிக்கும்போது, உலகின் இரு தொலைதூர நாகரிகங்கள் மனித வாழ்க்கையை எவ்வளவு ஒத்த பார்வையில் அணுகின என்பதை உணர முடிகிறது. இவை ஒன்றுக்கொன்று…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்

This entry is part 51 of 53 in the series அசுரவதம்

அனுமன் திரிகூட மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். அவன் மனம் சற்று சஞ்சலப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்து பெண்களால் எழுந்த தடைகள் ஒருபுறம் என்றாலும், இந்நிகழ்வுகளால் எழுந்த சினம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சினத்தினூடே அவனை மீண்டும் மீண்டும் அலைகழித்தது அந்த எண்ணம். ஒரு பெண்ணை…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

This entry is part 15 of 17 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா ஒற்றை நட்சத்திரம் வெளியே மழை பொழிகிறதுஎனக்குள்ளும் மழை பொழிகிறதுஒரு மேகம் இரு கண்களின்பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டுகாலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்துயர அழுகைஅதுவொரு விரக வேதனை…

Read more

விசுவநாதபுரி – 8

This entry is part 8 of 10 in the series விசுவநாதபுரி

இரண்டு மூன்று முறைகள் அவள் பட்டனை அழுத்தியும் கூட வண்டி நகர்ந்தபாடில்லை என்றதும் ஏதோ சந்தேகம் தோன்ற, அவள் கிரீஸை நிமிர்ந்து பார்த்தாள். “ஹே… என்னடா இது? வண்டியை நகர விடாமல் இப்படிப் பிடித்து அழுத்திக் கொண்டிருந்தாயானால் ஸ்கூட்டர் எப்படி நகரும்?…

Read more

அறிவெழுச்சி: 9

This entry is part 9 of 11 in the series அறிவெழுச்சி

பெரிகிளீஸின் அரசியலும் அஸ்பாசியாவின் செல்வாக்கும்: வரலாறு என்ன சொல்கிறது? “ஒரு மகத்தான அரசியல்வாதியின் பின்னால் ஒரு மகத்தான சிந்தனையாளர் இருந்தாரா என்ற கேள்விக்கு, வரலாறு எப்போதும் எளிதாகப் பதிலளிப்பதில்லை.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளில் மிகவும் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்.…

Read more

பாகோஸ் என்கிற நபும்சகன் – 7

டேரியஸ் III-இன் அரியணை ஏற்றமும் பாகோஸின் வீழ்ச்சியும் கி.மு. 336 ஆம் ஆண்டில் மற்றும் அவரது குடும்பத்தினர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அகாமனியப் பேரரசு மீண்டும் வாரிசுரிமை நெருக்கடியை எதிர்கொண்டது. தொடர்ந்து இரண்டு மன்னர்கள் குறுகிய காலத்தில் இறந்திருந்ததால், பேரரசின் உயரதிகாரிகள் மத்தியில்…

Read more

எளிதில்லை

பசியோடுஅழுதுகொண்டிருக்கிறதுபெயர் தெரியா குழந்தை,குடித்துவிட்டு மனைவியை அடித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரனொருவன்வீட்டுப்பாடம்எழுதிவிட்டேனென அம்மாவிடம் பாராட்டுவாங்கிக்கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி,உணவு கேட்டு வாசலில்நின்றுகொண்டிருக்கும் முதிர்ந்த யாசகிக்குஉணவோடுகுளிருக்கு போர்த்திக்கொள்ள உடையொன்றைஅளித்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்திவேலைக்குப் போன அப்பாவைக் கேட்டுதொந்தரவு செய்துகொண்டிருக்கிறான்ஒரு சிறுவன்மேகத்திற்குள் மறைந்த நிலவுவரும் வரை காத்திருந்துவந்த பிறகு பார்த்துக்கொண்டுவீட்டுக்குள் நுழைகிறார் ஒருவர்இன்பமும்…

Read more

கைவிடப்பட்ட கவிதை

எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய குழந்தையாய்கருவறை இருளிலேயே நின்றுவிட்டது அதற்குள் வாழ்க்கைதன்…

Read more

வாழ்வு

பரபரப்பானகடைத்தெரு சந்தில்ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.கடந்து போனவர்களில்ஒருவன் மட்டும் பார்த்துக்கொண்டே சென்றான்.தெருமுனை தரையில்ஒரு வறிய ஓவியன்வரைந்துகொண்டிருந்தான்.வேடிக்கை பார்த்தவர்களில்ஒரு வெள்ளைக்காரிமட்டும் காசு போட்டாள்.சிறுநீர் உபாதைக்காககம்பத்தின் மீது காலைத்தூக்கிய அந்த நாயைவிரட்ட நினைக்கவில்லை.சாய்ந்திருந்த சுவரின்சுண்ணாம்பு வண்ணம்சட்டையில் ஒட்டிக்கொண்டதைபோல உணர்ந்தாலும்முதுகைப் பார்க்க முயலாமல்எனக்கு நானேஉதடசையாமல்பேசிக்கொள்கிறேன்…

Read more

கானல் சிரிப்பு

மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் பற்றி எரிகிறதுஉணர்வுகள்.. ப்ரூட்டசாகவே இருப்பதையறிந்தும்தாயுமானவனாகவே வருகிறேன்குத்தப்பட்டு…

Read more