இலக்கியம்

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series இனியவன்

நின்ற கால்கள் நின்றபடி இருக்க, அந்தப் பெரியவரை நோக்கிச் சென்ற கண்களின் பார்வை திரும்பாமலே இருக்க… கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்வையைத் திருப்பி, மறுபடி அவரைப் பார்த்தான் சுல்தான் மாலிக் ஏஜாஸ். தீர்க்கமான, சாந்தமான கண்கள். வயதான உடல். ஆனால் தேஜஸ்… உடலில்…

Read more

ஏப்ரல் – 1

பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.

Read more

நெஞ்சக் கனல்

இந்த உலகத்தில் பிறப்பது மனிதர்களானாலும் சரி, என்னைப் போலவே மிருகமானாலும் சரி, ஆண்களாகவே பிறக்கக் கூடாது! ஏனாம்? பாருங்கள். நான் கண்களில் வெறியுடன் காது விடைத்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் சில நாட்களாக. நோ ரெஸ்ட். என் மேல் ஜக்கு; அவனும் என்…

Read more

வலைப்பூ – 2

This entry is part 2 of 7 in the series வலைப்பூ

தேநீர்க் கோப்பையிலிருந்து எழுந்த சூடான ஆவி அர்ஜுனின் முகத்தில் பட்டது. சுசி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனை ஆராய்ந்துகொண்டிருந்தன. அதை விலக்கத் தன் தலையைத் திருப்பிய அர்ஜுனின் பார்வை, தற்செயலாக மேசையின் மீதிருந்த கணிப்பொறியின் திறந்த திரையை நோக்கி நகர்ந்தது.…

Read more

இனியவன் – 4

This entry is part 4 of 5 in the series இனியவன்

“கல்யாணம் ஆகாத இளம் பெண்களுக்கும் கல்யாணம் ஆகிப் பல வருடம் ஆன பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. தெரியுமா ஜபீன்…?” கேட்டவன் சுல்தான் ஏஜாஸ் மாலிக். இடம் அந்தப்புரம் ஹரேம். கேட்டது மனைவி ஜபீன் மெஹருன்னிஸாவை. “என்ன, நிறைய வாய் பேசுவோமாக்கும்?”…

Read more

சின்ராசு

மால் எனத் தமிழில் அழைக்கப்படும் பல்வணிக அங்காடிக்கும், மால் என அழைக்கப்படும் மாலவன் திருமாலுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என யோசித்தான் நாகராஜ். மால் – பல்வேறு நகரங்களில் பரவி இருந்தாலும் எல்லாம் விதவித டைமென்ஷன்கள், விஸ்தீரணம் என்றாலும் அடிப்படை ஒன்றே. பல…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 17 – மொழியாக்கம்

This entry is part 16 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை…

Read more

தென்றலோடு கண்ணாமூச்சி.. – பூனையின் பொழுதுகள் 

1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால்  வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. *…

Read more

நல்லாச்சி – 27

This entry is part 27 of 40 in the series நல்லாச்சி

இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள்…

Read more

என்ன செய்ய?

இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.

Read more