asuravadham

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: தாய்க்கு ஒரு தாலாட்டு

This entry is part 52 of 52 in the series அசுரவதம்

“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி 

This entry is part 50 of 52 in the series அசுரவதம்

அனுமனை நிலைகுலையச் செய்யும் இராவணனின் ஒன்பதாவது மாய வலை, வதந்தியாக இலங்கையின் வீதிகளெங்கும் காட்டுத்தீயெனப் பரவியிருந்தது. வதந்தி என்பது மானுடக் கூட்டுமனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அச்சம், பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையின் கூட்டு வெளிப்பாடு. மனிதன் தன் அன்றாடப் போலி முகங்களுக்குப்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்

This entry is part 51 of 52 in the series அசுரவதம்

அனுமன் திரிகூட மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். அவன் மனம் சற்று சஞ்சலப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்து பெண்களால் எழுந்த தடைகள் ஒருபுறம் என்றாலும், இந்நிகழ்வுகளால் எழுந்த சினம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சினத்தினூடே அவனை மீண்டும் மீண்டும் அலைகழித்தது அந்த எண்ணம். ஒரு பெண்ணை…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.

This entry is part 49 of 52 in the series அசுரவதம்

“ஆம், அவள் என் மகள்! நம் ரத்தம்! என் கருவறையில் உதித்த குழந்தை!” மண்டோதரியின் அந்த வார்த்தைகள் இராவணனின் தலைக்குள் இடிமுழக்கங்களாக வெடித்துச் சிதறின. அவனுடைய நரம்புகள் ஒரு கணம் செயலிழந்தன. தான் தூக்கி வந்தது தன் சொந்த மகளையா? அசோகவனத்தில்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

This entry is part 48 of 52 in the series அசுரவதம்

“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

This entry is part 47 of 52 in the series அசுரவதம்

மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

This entry is part 46 of 52 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

This entry is part 45 of 52 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

This entry is part 44 of 52 in the series அசுரவதம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே…

Read more

அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..

This entry is part 43 of 52 in the series அசுரவதம்

காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற…

Read more