iyappan krishnan

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.

This entry is part 47 of 47 in the series அசுரவதம்

மாலை சூரியன், இராவணன் தன் தோல்வியின் கோபத்தால் தன்னைச் சுட்டெரிக்கக்கூடும் என அஞ்சி மேற்கு மலைத் தொடர்களின் பின்னே ஒளியத் தொடங்கினான். அப்படி ஒளிந்து கொண்ட பின்பும், மண்டோதரியின் துயரநிலை அறிந்து அவள் இனி என்ன செய்யப் போகிறாள் என்பதைக் கவனிக்க…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 7

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பால்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.

This entry is part 46 of 47 in the series அசுரவதம்

அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 6

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். வான்திறந்து பெய்யாதோ விண் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: காய்ந்த…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)

தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்

This entry is part 45 of 47 in the series அசுரவதம்

“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 5

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். பேயுண்டோ பாரில் பகர் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: நெஞ்சில்…

Read more

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்

This entry is part 44 of 47 in the series அசுரவதம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே…

Read more

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

ஜப்பானிய மொழியின் கட்டமைப்புக்கு இந்தச் சுருக்கமான ஒலியசை இலக்கணம் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போனதைப் பார்த்தோம். ஆனால், ஹைக்கூ கடல் கடந்து பிற மொழிகளுக்குப் பயணப்பட்டபோது, இந்த மரபான 5-7-5 இலக்கணம் ஒரு பெரும் சவாலாக மாறியது. ஆங்கிலம் போன்ற மேலைநாட்டு…

Read more

தான வீர சூர கர்ணன் – 7

This entry is part 7 of 7 in the series தான வீர சூர கர்ணன்

கர்ணன் நல்ல நண்பனா?கர்ணன், துரியோதனன் நட்பைப் பற்றிப் பேசும்போது, தமிழ்ச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது பெருந்தேவனாரும், வில்லிபுத்தூராரும் பாடிய ஒரு காட்சியமைப்புதான். கர்ணனும் துரியோதனன் மனைவி பானுமதியும் சொக்கட்டான் ஆடும்போது, துரியோதனன் திடீரென உள்ளே வர, பானுமதி பதறி எழுகிறாள்.…

Read more