சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியேசெல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்! உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டுஎள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டுபண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியேமண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே! பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனேஉலாவரும் …
Malathi Ramalingam
இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.
நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாகதானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!
அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!