Home இலக்கியம்புள்ளிமான்குட்டி

புள்ளி போட்ட மான்குட்டி
துள்ளி ஓடும் மான்குட்டி

கொம்பு கொண்ட மான்குட்டி
வம்பு பண்ணா மான்குட்டி

அழகான விழிகளாலே
எல்லோரையும் மயக்குகிறாய்
அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய்

நீ ஓடுகின்ற வேகத்திலே
பரபரக்குது மண்ணெல்லாம்
நீ தாவுகின்ற தாவலிலே
சடசடக்குது சருகெல்லாம்

புள்ளி வைத்த உடலிலே
கோலம் போட நான் வரவா?
குட்டையான வாலிலே
பின்னல் போட நான் வரவா?

உன் கோலிக்குண்டு கண்களிலே
மை வைக்க நான் வரவா?
உன் மரக் கிளை கொம்புகளில்
பூ வைக்க நான் வரவா?

உன்னைப் பார்க்கத் தோணும் போதெல்லாம்
உன் பொம்மை பார்த்து மகிழ்கிறேன்
உன்னைக் காணொளியில்
காணும் போது
கை தட்டித் தட்டி வியக்கிறேன்!

உன்னைப் பாதுகாக்கவே
பெரிய படிப்பு படித்திடுவேன்
பயமில்லாமல் நீ வாழ்வே
எல்லா நலனும் செய்திடுவேன்!

Author

You may also like

Leave a Comment