Ramalakshmi Rajan

ராமலக்ஷ்மி :
எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய’ விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன்…

Read more

வெயில் ஆடும் சுவர்

பாயின் மேல்தன் பொம்மைகளை நிறுத்துகிறாள்.முதலில் டெடி, அருகேஒற்றைக் காலணியைத் தொலைத்த பார்பி,மர ரயில், சிவப்பு ஜீப்,தூக்கக் கலக்கத்தில் நாய்க்குட்டி,துடிக்கும் மீசையுடன் பூனை,தும்பிக்கை தூக்கிய யானை.நேர்த்தியான வரிசையில்அனைத்தையும் அடுக்குகிறாள். சாக்பீஸைக் கையில் பிடித்துகோணலாக, ஆனால்தெளிவாக எழுதுகிறாள்.“நான் சொல்வதைஅப்படியே சொல்லுங்கள்”இனிமையாக அழைக்கிறாள்,சுவர்களில்வெயில் ஆடிக் கொண்டிருக்கையில்.…

Read more

கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

மூலம்: “Poetry Readings” – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழாக்கம்: ராமலக்ஷ்மி கவிதை வாசிப்புகள்எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடானவிஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்ஆண்களும் பெண்களுமாக,வாரம் தோறும், மாதம் தோறும்,வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டுதங்கள்…

Read more

தொலைவிலிருந்து கேட்கும் பாடல்

வீடு பழகிக் கொண்டதுமெல்லிய சத்தங்களில் பேச-ஒரு நாற்காலி நகர்வது,தொண்டையைச் செருமும் கடிகாரம். மாலைகள் நிதானமாக வந்தடையும்சன்னலோரம் அவர் அமர்ந்திருக்கிறார்இன்றைய நடமாட்டத்தை விடஅதிகக் காலடிச் சுவடுகளை அறிந்து வைத்திருக்கும்அந்தச் சாலையைப் பார்த்தபடி. சுவர்கள் பழைய சிரிப்புகளைத் தாங்கி நிற்கின்றன,ஆனால் அது இப்போது தெளிவற்றுக்…

Read more

இரு கவிதைகள் – டு ஃபு

போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை…

Read more

மாயக் கோடுகள்

சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக…

Read more

தென்றலோடு கண்ணாமூச்சி.. – பூனையின் பொழுதுகள் 

1. தரையில் வெயில் சூட்டில் சுருளும் பூனை ஓய்வெடுக்கும் நண்பகல். * 2. நடுநிசி சன்னல் ஓரம் நிலவொளியில் பதியும் பாதம் களவு போகும் இரவு. * 3. சருகுகள் நகரும் ஒலி தீயாகத் துடிக்கும் வால்  வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று. *…

Read more

அவள் நடக்கிறாள்

அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்…

Read more

உப்புக் காற்று

பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த…

Read more

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்]

​1. இருள் தளரநீலத்தில் தேயும் விண்மீன்கள்விரியும் காலை! 2. வெண்மேகம் விலகஒளி சிந்தும் சூரியன்பேசும் பகல்! 3. மேக நிழல்கள்மண்ணில் வரையும் சித்திரங்கள்வானமெனும் குழந்தை! 4. வானம் திறக்கஇலைகளைத் தொடும் வெயில்மென்மையான வாழ்வு! 5. மலை மேல் சூரியன்குருவியின் குரல் கரையமறையும்…

Read more