இலக்கியம்

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

This entry is part 27 of 36 in the series அசுரவதம்

கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின்…

Read more

சின்ன வேண்டுதல்

தமிழ்நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் யோகிதா கோழி மற்றும் கால்நடைத் தீவன நிறுவனத்தில் உள்ள மாடுகள் எல்லாம் நன்றாகச் செளக்கியமாக இருந்து, உற்பத்தி செய்யும் பால், தயிர், வெண்ணெய் + கோழிகள் எல்லாம் சேவலுடன் சேர்ந்தோ சேராமலோ, இடும் முட்டைகள் முதலியவற்றையும், அவற்றுக்கான…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் ‎தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை…

Read more

தனிமையின் தண்மை

தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.

Read more

சின்ன வேஷம்

சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில்…

Read more

காற்றில் உதிரும் கணம்

சாளரத்தைத் திறந்தவள்சன்னமாய்ச் சிரித்தாள்காத்திருப்பின் ரகசியம்காற்றில் கலந்த கணம் உள்ளக் கிளர்ச்சி எல்லாம்ஊர்வலமாய்ப் போகுதுவெள்ளம் திரண்டது போல்வெகுளித்தனம் மீறுது கள்ளத்தனம் எல்லாம்காணாமல் போனதுகரை கடந்த அன்பு இங்கேகரம் கோர்க்கப் பார்க்குது ஒற்றை மலர் தனியேஒய்யாரமாய் நின்றதுஎட்டிப் பார்த்த அவளைஏறெடுத்துப் பார்த்தது சாய்வது போல்…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?) 

This entry is part 26 of 36 in the series அசுரவதம்

விந்திய மலைத்தொடரின் சிகரங்களில் விடியற்காலையின் முதல் பொன்னிற ஒளி விழுந்தபோது, துங்கபத்திரை நதி தன் நீலத் தோள்களில் அந்த ஒளியை ஏந்திக்கொண்டு, சலசலத்துக்கொண்டு ஆக்ரோஷமாகப் பாறைகளுக்கிடையே நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்தச் சலசலப்புகள் கிஷ்கிந்தைக்கு வர இருக்கும் துயரங்களுக்கான கிசுகிசுப்பைப் போன்று இருந்தன.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた) முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது…

Read more

உன் உழைப்பால் சிகரம் தொடு!

அடுத்தவரின் உழைப்பை அபகரித்தல் முரணே!தடுத்ததனை தவிர்ப்பதே தருமத்தின் முறையே!எடுக்கின்ற காரியத்தில் எதிர்வரும் தடைகள்முடுக்கிவிடும் திறனை முயற்சிக்கு முதற்கல்! உழைக்கின்ற சுயமும் உள்ளத்து உறுதியும்விழைகின்ற யாவிலும் வெற்றிக்கு வழியே!உடன் உழைப்போர்க்கும் வழியை விடு!உன் உழைப்பால் சிகரம் தொடு!

Read more

நல்லாச்சி – 24

This entry is part 24 of 32 in the series நல்லாச்சி

உலகத்து வெயிலெல்லாம் உம்மேலதான்’செல்லமாகக் கடிகிறாள் நல்லாச்சிநட்புகளுடன் விளையாடும் பேத்தியைஉச்சிப்பொழுதின் வெப்பம்வாட்டுமென்ற அக்கறையில்கலந்தாலோசித்த பட்டாளம்திருவிழா விளையாட்டைத் தேர்கிறதுஅறங்காவலராக்குகிறது நல்லாச்சியை செங்கற்களே மூர்த்தங்களாய்அகப்பட்ட பூக்களே தோரணங்களாய்வடிவெடுக்கிறது சப்பரம்பூஜைப்பொருட்கள் ஒருவன் உபயம்நைவேத்யம் ஒருத்தி கொணர்கிறாள்காற்றில் ஒருவன் கொட்டுமுழக்கதாத்தாவின் கைத்தடி நாகஸ்வரமாகிறதுஏதும் கொணராத ஒருத்தியைவிலக்குகிறது கூட்டம் பதைக்கிறாள்…

Read more