இலக்கியம்

அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்

This entry is part 17 of 30 in the series அசுரவதம்

ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார்…

Read more

எப்பொழுதும் பெட்டி கட்டுபவர்கள் – தமிழில் – யாழினி சென்ஷி

மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில்…

Read more

உள்ளதைப் பேசு

காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. பாப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதான்…

Read more

அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்‌குவா

This entry is part 16 of 30 in the series அசுரவதம்

இராமன் குழப்பத்துடன் நின்றான். ​இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு,…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம்

3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை. முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும்…

Read more

மழையின் ரீங்காரம் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று அசையும் ஊஞ்சல். 5.மழலையின் பள்ளி முதல்…

Read more

“ம்..” 2

This entry is part 2 of 5 in the series "ம்.."

விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் தாவித் தாவி ஏதாவது பழமோ கொட்டையோ கிடைக்குமா? எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மூலையில் காகம் ஒற்றைக் கண்ணை உருட்டி…

Read more

நல்லாச்சி – 16

This entry is part 16 of 26 in the series நல்லாச்சி

ஒட்டி இழையும் குஞ்சுகளையெல்லாம்எட்டித்துரத்தும் கோழியின் போக்குகொஞ்சமும் பிடிக்கவில்லை பேத்திக்குநல்லாச்சியிடம் வந்து அங்கலாய்க்கிறாள்‘பிள்ளேளுக்க தப்பை அம்மைதானே மன்னிக்கணும்அதுகளுக்கேது போக்கிடம்’ வெதும்பும் பேத்தியைதேற்றுகிறாள் நல்லாச்சி புன்னகையுடன்‘அட! கோட்டிப்பயபுள்ள.. குஞ்சுகளையெல்லாம்கோழி தவுத்துட்டுது’ என்கிறாள்‘தவிர்த்துவிட்டது’ எனத் தெளிவாயும் செப்புகிறாள்புரியாமல் தலைசொரியும் பேத்திக்குஇரைதேடல் முதல்இரையாகாமல் தப்புதல் ஈறாகப் பயிற்றுவித்தபின்குழந்தைகளைசுயமாய்…

Read more

தமிழே அமிழ்தே – 1

This entry is part 1 of 10 in the series தமிழே அமிழ்தே

சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு…

Read more

நல்லாச்சி – 15

This entry is part 15 of 26 in the series நல்லாச்சி

சுரைக்குடம் கட்டிச் சில நாட்கள்காற்றடைத்த பையுடன் பலநாட்கள்கவிழ்த்த குடத்துடன் ஒன்றிரண்டு நாளேகடப்பாரை நீச்சலை மறந்துகெண்டை மீனாய் நீந்துகிறாள் பேத்திநீரில் தானுமொரு துளியாய்க்கலந்தவளுக்குநிலமென்பது நினைவிலேயே இல்லை ஆறும் குளமும் யோசிக்கின்றனஅடுத்த ஊருக்குப் போய்விடலாமெனதவளைகளெலாம் தப்பித்துவிட்டன எப்போதோ‘கலங்கியது தானே தெளியும்’அமைதிப்படுத்துகிறது மூத்த ஆறொன்று‘வாய்ப்பில்லை’ என்கிறது…

Read more