கவிதை

ஏப்ரல் – 1

பள்ளி முடிந்துஅவசர அவசரமாகவீட்டிற்கு வந்துஅம்மா வருவதற்குள்பேனா மைத்துளிகள்கோலமிட்ட சீருடையைசோப்பு நீரில்முக்கித் துவைக்கையில்… பறந்து உடையும்வண்ண நீர்க்குமிழிகளில்அன்றைக்கு சூதுவாதின்றிநண்பர்களுடன் ஏமாற்றிகொட்டமடித்த எண்ணங்கள்மின்னி மறையும்; பிள்ளைப் பருவத்தில்ஏமாந்த கோபத்திற்குநீர்க்குமிழியின் ஆயுள்,நீடித்த நட்பினில்கடுமைகள் ஏதும்பலநாள் தொடராது. மனதினில் எதனையும்நிறுத்திக் கொள்ளாதிருக்கஒரு முறையேனும்மீண்டும் வாராதோ…கள்ளமில்லா பிள்ளைப்பருவஏப்ரல் 1.

Read more

மாயக் கோடுகள்

சுவர்கள் எப்போதும்செங்கற்களால் எழுப்பப்படுவதில்லை,சில நேரங்களில் அவை எண்ணங்களைசுவாசித்தும் எழுகின்றன.இயலாதெனும் தயக்கமும்வேண்டாமெனும் எச்சரிக்கையும்ஒரு முடிச்சாகப் பிணைந்துகாலத்தைக் கட்டிப் போடுகின்றன. நமது எல்லைகளால்ஆகாயம் சுருங்கிப் போகிறது.நமது சந்தேகங்களால்அடிவானம் மறைந்து போகிறது.நமது தடுமாற்றங்களால்திசை விளிம்பு குறுகிப் போகிறது. வெளிப்படுத்தாத வார்த்தைகள்மெளனச் சுவர்களாக உயருகின்றன.மாயக் கோட்டிற்குள்அவிழாத புதிர்களாக…

Read more

நல்லாச்சி – 28

This entry is part 28 of 40 in the series நல்லாச்சி

வெய்யில் வாட்டுகிறதாம் நல்லாச்சியைவருடந்தோறும் அதிகரிப்பதாய்ப் புலம்புகிறாள்மழையும் குளிரும் வெயிலும்அதிகரித்துகொண்டே போவதாய்ச்சொல்லிஅந்தந்த தெய்வங்களை ‘அர்ச்சிக்கிறாள்’ஒருவரையொருவர் நோக்கிக்கொள்கின்றன அவைபாவம்போல்குளிருக்கென்றோர் தெய்வம் இல்லாமல்தவித்துத் திரிகின்றன அர்ச்சனைகள் முற்றத்தைப்போர்த்திய தென்னங்கிடுகுசாளரங்களைத் திரையிட்ட வெட்டிவேர்குலைகுலையாய் நுங்கும் இளநீரும்கூடவே கொஞ்சம் மோரும் பானகமும்ஆயுதங்களுடன் தயாராகத்தானிருக்கிறாள்குட்டிச் சிப்பாய் பேத்தியுடன் அவ்வூரைக் கடக்குமட்டும்மேகத்தில்…

Read more

நல்லாச்சி – 27

This entry is part 27 of 40 in the series நல்லாச்சி

இருளென்றால் பயப்படும் பேத்திக்குஇரவும் ஆகாதுமூன்றுகண்ணன் வசிப்பதாய்முற்றத்திற்கும் செல்ல மாட்டாள்இரவின் நிறத்தைப் பூசியதால்கருமையும் ஒவ்வாததாயிற்று ஒரு எள்ளுருண்டையைப்போல்திரண்டிருக்கும் கன்றுக்குட்டிக்கோஅவளென்றால் தனிப்பிரியம்ஒதுக்கினாலும் விரட்டினாலும்அகலாது பிரியஞ்சொரியும் பேத்தியைத் தெளிவிக்கஇட்டுச்சென்ற நல்லாச்சிபலவும் சொல்லிப் போதிக்கிறாள்பிஞ்சு மனதைப் பக்குவப்படுத்துகிறாள்இரவின் கருமைக்குள்தான் நட்சத்திரங்கள்தம் முகவரியைத் தேடிக்கொள்கின்றனவெளிச்சம் ஓர் பிம்பம் எனில்இருள்…

Read more

என்ன செய்ய?

இருந்தபோது தெரியவில்லை இதயமும் இருப்பும்உணர்ந்துவிட்டான் இப்போது!கிடைக்கையில் உணரவில்லை கிட்டுவது பெரிதெனஅறிந்துகொண்டான் இப்போது! அன்பென அறிந்தே செய்தவனின் அலட்சியத்தைஅள்ளியெறிந்தான் இப்போது!தனிமையைத் துணைகொண்டவன் தவிக்கிறான்!அணங்கவளின் நினைவை என்ன செய்ய.

Read more

கீழ்நிலை உயிரினம்

ஆயிரமாயிரம் ஆண்டு காலம் மடியும் உயிர்கள்ஆழியின் ஆழ மடியில் சேரும்;மண்ணும் சேறும் நீரும் மூடமருளச் செய்யும் இருள் அங்கே சூழும்! பூமித் தாயின் வெப்பம் கனன்றுபுதைந்த உயிர்கள் கொள்கலனில் உருவம் மாறும்;அழுத்தம் தந்து மேலும் இயற்கை சமைக்கஅடியில் உருவாகும் அமுதம் கருப்புத்…

Read more

நல்லாச்சி – 26

This entry is part 26 of 40 in the series நல்லாச்சி

நல்லாச்சியிடம் கதையளக்கிறாள் பேத்திகண்டபடி பறக்கிறது கற்பனைக்குதிரைகதை சொல்வதும் அளப்பதும்ஆச்சிகளின் வழக்கம்இங்கு இன்றுஅது பேத்தியின் முறை நல்லாச்சியின் முதல் விமானப்பயணம்குதூகலம் பாதிகலவரம் பாதியென இருப்பவளிடம்தான்கண்ணகல உரைக்கிறாள் பேத்திமேகங்களின் மேல் ஓய்வெடுக்கும் நிலவைவன்னமிகு இந்திரலோகத்தைமேலோகம் சென்ற மூதாதையரைகண்குளிரக் காணலாமென்கிறாள்அறிவுக்கும் சந்தேகத்துக்குமிடையேஊசலாடுகிறது நல்லாச்சி உள்ளம் உயரப்பறந்த…

Read more

ஒற்றையடிப் பாதை

பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே…

Read more

நல்லாச்சி – 25

This entry is part 25 of 40 in the series நல்லாச்சி

நாளும் நாலு நல்லதைநடைப்பயிற்சியின்போது அலசுவதுநல்லாச்சிக்கும் பேத்திக்கும் வழக்கம்தகவல்கள் பரிமாறுவதுபோலவேஅறிவுரைகளும் பரிமாறப்படும்பேதமின்றி ஏற்பாள் நல்லாச்சி வகுப்புத்தோழி குடும்பச்சண்டையால்அம்மாச்சி ஊருக்குப் போய்விட்டது முதல்நாளது தினம் தொலைக்காட்சிச்செய்தி வரைபிழிந்து அலசியபின்பேத்திக்கு வருகிறது சந்தேகமொன்றுமனிதர்கள் ஏன் மோதிக்கொள்கிறார்களென அகந்தையும் தன்முனைப்பும்பெற்றுப்போட்ட காரணங்கள்தாம்காரணங்களென்கிறாள் நல்லாச்சிதுளிக்குள் பிறந்தழியும்மாந்தர் அறியாரோதுளிக்குள் துளியே…

Read more

அவள் நடக்கிறாள்

அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்…

Read more