சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன. சடாயுவின் …
அசுரவதம்
தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம், …
பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது …
அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட , …
ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார் …
கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா. இராவணன் …
மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் பயம் காரணமில்லை. சீதை என்னும் பெண்ணைக் …
இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று …
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. …