அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
கவிதை
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம் …
பொழுது விடியும் முன்பேஅவர்கள் புறப்பட்டனர்.அவர்களது வலைகள்நம்பிக்கையால் கனத்திருந்தன.அமைதியாக இருந்ததுஅடிவானம்.நீல நிறத்தைப் பரப்பஆயத்தமாகிக் கொண்டிருந்ததுஆகாயம். அவர்களது தோலில்நினைவுகளைப் போல்ஒட்டிக் கொண்டிருந்தது உப்பு.எழும் ஒவ்வொரு அலையும்அவர்கள் வாழ்நாளெல்லாம் அறிந்தஒரு மூச்சினைப் போல் உயர்ந்தது. எண்ணும் முன்பேமேகங்கள் திரள்கின்றன.ஒரு கனத்த மௌனம்பிறகொரு பலத்த முழக்கம்.அவர்களுக்காகவேபாடிக் கொண்டிருந்த …
சாப்பிடுவதற்குசெரை படுத்தாத பேத்திஏனோசில பொழுதுகளில் சுணங்குவதுண்டு‘காத்தாட சாப்பிடுதேன்’ என்றபடிகிணற்றடிக்குத் தட்டுடன் செல்பவள்துலக்கி மினுக்கி மீள்வாள்அம்மட்டில் திருப்தியுற்ற நல்லாச்சிகண்டுகொள்ளாதிருக்கிறாள் சின்னவளை ‘காத்தாட’ தனித்துண்ணும் பொழுதுகள்சந்தேகத்தை விதைக்கின்றனஅன்னையின் மனதில்செல்லப்பேத்தியைச் சொல்லுக்கு ஆளாக்கினால்ஆச்சி வீசுவாள் கண்டனக்கணையைஅகிலமே ஆச்சிக்கு அஞ்சும்போதுஅன்னை எம்மாத்திரம்எனினும்புகையை ஒளிக்க இயலுமோ!! கரையவிட்ட தோசைகள் …
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், காதலும்சேர்ந்தே பொதிந்துள்ள நித்திலம் ! அல்லவை, …
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை தனித்தே இருப்பவைஅடையாளங்களோடு… *********************************************************2.பழுதாகும் பொழுதுகளில் எல்லாம் …
விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும் …
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.
வகுப்பறை கீதங்களில்வரவேற்றிடும்வாழ்த்து மழை. பிஞ்சுகளின் கரங்களில்தேகத்தில் பாய்கிறதுபனித்துளிகளின் குளிர்ச்சி. கொஞ்சிடும் பேச்சுகளில்ராகங்கள் கூட்டிடும்இசைச்சுரங்களின் சேர்க்கை. எண்ணங்கள் விரித்திடும்சின்னச் சின்னக் கனவுகளில்வகுப்பறையெங்கும்வண்ணத்துப்பூச்சிகள். குடும்பத்தை வினவுகையில்விழியும் மொழியும்விளிம்பிடும் உற்சாகம். புத்தகம் படிக்கையில்மத்தாப்புச் சிதறலெனபிறந்திடும் சிந்தனைகள். ஐயத்தை எழுப்புகையில்மனவாசனைகளில்நிரம்பிடும் தெளிவு. சித்திரங்களில் ஆடிடும்நிறங்களின் கலவைக்குள்மயில்தோகையின் பரிமாணம். …
பேரன்பும் பெருங்கருணையும்ததும்பித்தளும்பிய காலக்கடலிலிருந்துபொங்கிப்பிரவாகித்துகரைதழுவ ஓடி வந்தன நினைவலைகள்நினைவுகளெனில் பாலைவனச்சோலையுமாம்நினைவுகளெனில்புன்னகையின் பின்னொளிந்த கோரப்பற்களுமாம் வாழ்வெனும் காட்டாற்றின் நடுவேசிறுதுண்டு நிலமாய்காலூன்றி ஆசுவாசம் கொள்ளவும்மலர்ந்திருக்கும் நினைவுகளில் கமழும்நறுமணத்தால் பேதலித்துகாலடி நிலம் நழுவவும்இளஞ்சூரியன் சிரிக்கும் இவ்வீதியில்அதோ அந்தக்குழந்தையின் நகைப்பொலியாய்ஓங்கியொலித்துஇறுதியில் முணுமுணுப்பாய்த் தேய்ந்தடங்கவும்என நங்கூரமிட்டுவரிசையாய் நிற்கின்றன நினைவுகள்அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்நட்சத்திரங்களைப்போல் …